அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

சாத்தான்குளம் அருகே இளைஞர் வெட்டிக்கொலை!

சாத்தான்குளம் அருகே வியாழக்கிழமை இரவு இளைஞரை சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடர்பாக சாத்தான்குளம் போலீசார் மூன்று பேர்களை தேடி வருகின்றனர்.

News image
கொலை செய்யப்பட்ட இளைஞர் ரேவந்த் குமார்
Updated On :7 அக்டோபர் 2022, 5:28 am

DIN

 
சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே வியாழக்கிழமை இரவு இளைஞரை சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடர்பாக சாத்தான்குளம் போலீசார் மூன்று பேர்களை தேடி வருகின்றனர்.

சாத்தான்குளம் அருகில் உள்ள பள்ளங்கிணறு தெற்கு தெருவை சேர்ந்தவர் பட்டு ராஜா மகன் ரேவந்த் குமார் (26). இவர் சென்னையில் பழைய இரும்பு கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 4 ஆம் தேதி தசரா திருவிழாவிற்காக சொந்த ஊர் வந்தார். 

இந்நிலையில், சாத்தான்குளத்தில் இருந்து செட்டிகுளம் நொச்சிகுளம் விலக்கு அருகில் உள்ள கல்லறைத் தோட்டம் அருகில் தலை மற்றும் கழுத்து கைகளில் காயத்துடன் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து அவரது உடலைக் கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு  அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். 

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், பள்ளங்கிணற்றை சேர்ந்த சாமுவேல் மகன் சித்திரை ஜெகன் என்ற ஜெகன்(36 )அவரது தம்பி சுடலை (34) ஆறுமுகம் மகன் முத்துசாமி (40) ஆகியோர் ரேவந்த் குமாரை அழைத்து வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது.

கடந்த 4 ஆண்டுகள் முன்பு ரேவந்த் குமாரின் சித்தப்பா செந்தில்வேல் என்பவரை சித்திரஜெகன் உள்ளிட்ட இரண்டு பேர் தசரா திருவிழா தொடர்பாக வெட்டிக் கொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக இருவருக்கும் பிரச்னை இருந்து வந்ததாக தெரிகிறது. மேலும், பள்ளங்கிணறு ஊரில் இரண்டு தசரா குழுக்கள் செயல்பட்டு வந்துள்ளது. அதில் ஓரு குழுவில் ரேவந்த் குமார் தீவீரமாக செயல்பட்டதாக தெரிகிறது. ரேவந்த்குமார் சுறுசுறுப்பாக செயல்பட்டு வந்ததால் சித்தப்பாவை கொலை செய்ததில் தன்னை கொலை செய்து விடுவார் என்ற அச்சத்தில் ஜெகன் இருந்து வந்ததாக தெரிகிறது. 

இந்நிலையில், சித்திரைஜெகன் அவரது சகோதரர் சுடலை, உறவினர் முத்துசாமி ஆகியோர் நொச்சிக்குளம் விலக்கில் உள்ள கல்லறைத் தோட்டம் அருகில் ரேவந்த் குமாரை வரவழைத்து அவரை சரமாரியாக வெட்டியதும் இதில், தலை, கை கழுத்து பகுதியில் வெட்டுப்பட்ட ரேவந்த் குமார் சம்பவ இடத்தில் இறந்து போனது தெரியவந்தது. சம்பவ இடத்தை சாத்தான்குளம் டிஎஸ்பி அருள் பார்வையிட்டார்.

சாத்தான்குளம் அருகே இளைஞர் கொலை செய்யப் பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.