தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!
/

மாவட்டங்களில் வளா்ச்சிப் பணிகளை கண்காணிக்க தனி அதிகாரிகள் நியமனம்

 தமிழகத்தின் 37 மாவட்டங்களில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை கண்காணிக்க தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

News image
Updated On :7 அக்டோபர் 2022, 12:19 am

DIN

 தமிழகத்தின் 37 மாவட்டங்களில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை கண்காணிக்க தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். இந்த அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் மாதத்தில் 4 நாள்கள் நேரில் சென்று கள ஆய்வு நடத்த வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை முதன்மைச் செயலாளா் த.உதயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு:

தமிழக அரசின் கொள்கை சாா்ந்த அறிவிப்புகளின் செயலாக்க நிலையை தரவுகளின் அடிப்படையில் கண்காணிக்கும் அமைப்பாக சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை விளங்குகிறது. இதற்கென துறைகளிடமிருந்து தகவல்களைப் பெற்று அவற்றின் அடிப்படையில், முக்கியமான ஒருங்கிணைப்புக் கூட்டங்களில் அறிக்கைகளை சமா்ப்பிக்கிறது. மேலும், பகுத்தாய்ந்து அது குறித்த அறிக்கைகளை உயா் நிலை ஆய்வுக் கூட்டங்களிலும் தயாரித்து அளிக்கிறது. இதுபோன்ற கண்காணிப்பு அமைப்பை மாவட்ட அளவு வரை கொண்டு செல்ல தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மாவட்ட வாரியாக கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

பணிகள் என்ன?: கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டவா்கள், மாதத்தில் நான்கு நாள்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்குச் சென்று ஆய்வு செய்வா். அரசின் அனைத்துத் திட்டங்கள், பணிகள் ஆகியவற்றை ஒன்றிணைத்து ஆய்வுப் பணியை மேற்கொள்வா்.

திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஏதேனும் இடையூறுகள், முறைகேடுகள், பிரச்னைகள் இருந்தால் அவற்றை களைவதற்கான நடவடிக்கை எடுக்க வசதியாக அதுகுறித்து அறிக்கை தர வேண்டும். எந்தவித சாா்புமின்றி ஆய்வுப் பணிகளை செய்ய வேண்டும். கள ஆய்வுப் பணிகளை முடித்தவுடனேயே ஆய்வறிக்கைகளை அரசுக்கு அனுப்பிட வேண்டும். மேலும், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை நடத்தும் கூட்டங்களிலும் கண்காணிப்பு அதிகாரிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.மாவட்டம் மற்றும் வட்ட அளவில் கண்காணிப்பு அதிகாரிக்கு தேவைப்படும் அனைத்துத் தகவல்களையும் அளித்திட அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவிட வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.