மயிலாப்பூர் சந்தையில் காய்கறி வாங்கிய நிர்மலா சீதாராமன்!

சென்னை மயிலாப்பூர் சந்தையில் வியாபரிகளிடம் உரையாடிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காய்கறிகளை வாங்கினார்.
மயிலாப்பூர் சந்தையில் காய்கறி வாங்கிய நிர்மலா சீதாராமன்!
Updated on
1 min read

சென்னை மயிலாப்பூர் சந்தையில் வியாபாரிகளிடம் உரையாடிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை இரவு காய்கறிகளை வாங்கினார்.

தமிழகத்திற்கு ஒருநாள் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சென்னையில் இன்று காலை முதல் இரவு வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது மயிலாப்பூர் சந்தை அருகே காரைவிட்டு இறங்கிய நிர்மலா சீதாராமன், அங்குள்ள சில காய்கறி வியாபாரிகளிடம் உரையாடினார். தொடர்ந்து, காய்கறிகளை வாங்கியுள்ளார்.

இந்த காணொலி நிர்மலா சீதாராமன் அலுவலக டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com