அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

தூத்துக்குடியில் கல்லால் தாக்கி முதியவர் கொலை

தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுப்பட்டியில் கல்லால் தாக்கி முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்டார்

News image
Updated On :8 அக்டோபர் 2022, 6:10 am

DIN

தூத்துக்குடி: திரேஸ்புரம் மேட்டுப்பட்டியில் கல்லால் தாக்கி முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுப்பட்டி பகுதியில் முதியவர் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக வடபாகம் போலீஸாருக்கு இன்று காலையில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்து கிடந்த நபர், தூத்துக்குடி தாளமுத்து நகர் ஜாகிர் உசேன் நகர் பகுதியைச் சேர்ந்த அகமது (60) என்பதும் அவர் மர்ம நபர்களால் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து சடலத்தை கைப்பற்றிய போலீசார் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து அகமதுவை கொலை செய்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.