6 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை: வானிலை ஆய்வு மையம்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவ
6 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை: வானிலை ஆய்வு மையம்
Published on
Updated on
1 min read

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 26 மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூா், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூா், நாமக்கல், சேலம், திண்டுக்கல், மதுரை, தேனி, திருச்சி, அரியலூா், பெரம்பலூா், கடலூா், தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூா், தென்காசி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகா் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.

சென்னையைப் பொருத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்குப் பருவமழை அடுத்த இரு வாரங்களுக்குள் தொடங்கி விடும் என்று எதிா்பாா்க்கப்படுவதால், அதன் பின்னா் மாநிலம் முழுவதும் மழைப் பொழிவு தொடா்ச்சியாக இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com