சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

இறந்தவரின் உடலை ஆற்றைக் கடந்துச் சென்று அடக்கம் செய்யும் அவலம்!

திருப்பத்தூர் அருகே இறந்தவரின் உடலை ஆபத்தான முறையில் ஆற்றைக் கடந்துச் சென்று அடக்கம் செய்யும் அவல நிலை நீடித்து வருகிறது.

News image
இறந்தவரின் உடலை ஆற்றைக் கடந்துச் சென்று அடக்கம் செய்யும் அவலம்!
Updated On :11 அக்டோபர் 2022, 6:21 am

DIN

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே இறந்தவரின் உடலை ஆபத்தான முறையில் ஆற்றைக் கடந்துச் சென்று அடக்கம் செய்யும் அவல நிலை நீடித்து வருகிறது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த காக்கனாம்பாளையம் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இப்பகுதியில் பாலம் அமைத்து தர வேண்டி அப்பகுதி மக்கள் பலமுறை கட்சி பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் காக்கனம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் நேற்று உடல்நிலை பாதித்து உயிரிழந்ததன் காரணமாக அவரின் உடலை அடக்கம் செய்ய அப்பகுதி மக்கள் காக்கனம்பாளையம் பகுதியில் இருந்து மிகவும் ஆபத்தான முறையில் பாம்பாற்றைக் கடந்து மறு கரையில் உள்ள சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்த அவல நிலை ஏற்பட்டது.

மேலும் இந்தப் பகுதியில் மழைக்காலம் வந்தால் பாம்பாற்றைக் கடந்து சுடுகாட்டிற்கு செல்வதே மிகவும் சிரமம் ஏற்படுகிறது. எனவே அப்பகுதியில் உடனடியாக பாலம் அமைத்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.