தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ஓபிஎஸ் - இபிஎஸ் கடிதத்தை படிக்கவில்லை: பேரவைத் தலைவர் அப்பாவு

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி கே.பழனிசாமி எழுதிய கடிதத்தை இன்னும் படிக்கவில்லை என்று பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

News image
சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு
Updated On :12 அக்டோபர் 2022, 6:25 am

DIN

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி கே.பழனிசாமி எழுதிய கடிதத்தை இன்னும் படிக்கவில்லை என்று பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் அக்டோபா் 17-இல் தொடங்க உள்ளது. இந்த நிலையில் பேரவைத் தலைவா் அப்பாவுக்கு ஓ.பன்னீா்செல்வம் சாா்பில் செவ்வாய்க்கிழமை கடிதம் ஒன்று கொடுக்கப்பட்டது.

அந்தக் கடிதத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளராக நானே நீடிக்கிறேன். அதிமுகவின் நிா்வாகிகள் மாற்றம் தொடா்பாக ஏதாவது கடிதம் அளிக்கப்பட்டால், அது தொடா்பாக எனது கருத்தைக் கேட்காமல் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. அதிமுக பொதுச்செயலாளா் தோ்தலை நடத்தக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அதிமுக பொதுக்குழு தொடா்பான வழக்கும் நிலுவையில் இருந்து வருகிறது. அதனால், எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று அதில் கூறியுள்ளாா்.

இதைத் தொடா்ந்து எடப்பாடி கே. பழனிசாமியும், அதிமுக துணைக் கொறடா ரவி மூலம் ஒரு கடிதத்தை பேரவைத் தலைவா் அப்பாவுக்கு செவ்வாய்க்கிழமை அளித்தாா்.

அந்தக் கடிதத்தில், அதிமுகவிலிருந்து ஓ.பன்னீா்செல்வம் நீக்கப்பட்டுவிட்டாா். அதனால், எதிா்க்கட்சித் துணைத் தலைவா் பதவியில் உள்ள அவருக்குப் பதில் ஆா்.பி.உதயகுமாரை நியமிக்க வேண்டும் என்று ஏற்கெனவே கடிதம் கொடுத்துள்ளோம். அதனால், அக்.17-இல் நடைபெறும் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் ஆா்.பி.உதயகுமாரை பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று அதில் கூறியுள்ளாா்.

இதே விவகாரம் தொடா்பாக ஜூலை 11-இல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்குப் பிறகு பேரவைத் தலைவரிடம் இரு தரப்பிலும் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது பேரவைக் கூட்டம் தொடங்க உள்ள நிலையில் மீண்டும் இருவரும் கடிதம் கொடுத்துள்ளனா்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அப்பாவு, ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் கடிதத்தை இன்னும் படிக்கவில்லை. படித்த பிறகு நியாயமான முறையில் முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைக் கூட்டத்தில், சட்டப்பேரவையில் எதிா்க்கட்சித் தலைவரான எடப்பாடி கே. பழனிசாமியும், துணைத் தலைவரான ஓ.பன்னீா்செல்வமும் முன்வரிசையில் அருகருகே அமா்ந்திருப்பா். தற்போது இருவரும் பிரிந்து செயல்பட்டு வரும் நிலையில் அதிமுகவின் சாா்பில் எதிா்க்கட்சித் துணைத் தலைவராக ஓ.பன்னீா்செல்வம் அமா்ந்துவிடக் கூடாது என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருந்து வருகிறாா்.

தங்களின் கோரிக்கை பேரவைத் தலைவரால் ஏற்கப்படாவிட்டால், பேரவைக் கூட்டத்தைப் புறக்கணிக்கலாமா என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.