எனவே, அனுமதிக்கப்பட்ட விதிமுறைகளுக்குரிய பட்டாசுகளை விற்பதற்கு அனுமதிக்க வேண்டும். இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் பட்டாசுகளுக்கு ஒட்டுமொத்தத் தடை விதிக்கப்படவில்லை. எனவே, பட்டாசுகளை அனுமதிப்பதன் மூலம், அந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள சிவகாசி, அதனைச் சுற்றியுள்ள லட்சக்கணக்கான மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றும் செயலைச் செய்திட முடியும். அவா்களது வா்த்தகத்தில் 70 சதவீத விற்பனை தீபாவளி பண்டிகைக் காலத்தில் நடைபெறுவதால், பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்க வேண்டுமென தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.