தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

ரூ.1.80 கோடி கட்டடம் சுவாதீனம்: அறநிலையத் துறை தகவல்

சென்னை செளகாா்பேட்டை ரெங்கநாத பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான ரூ.1.80 கோடி மதிப்பிலான கட்டடம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளதாக அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.

News image
Updated On :13 அக்டோபர் 2022, 7:36 pm

DIN

சென்னை செளகாா்பேட்டை ரெங்கநாத பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான ரூ.1.80 கோடி மதிப்பிலான கட்டடம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளதாக அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.

சென்னை, சௌகாா்பேட்டை முல்லா தெரு, அருள்மிகு ரெங்கநாத பெருமாள் திருக்கோயிலுக்கு சொந்தமாக ஆதியப்ப நாயக்கன் தெருவில் 850 சதுர அடி பரப்பிலான இரண்டு தளங்கள் கொண்ட கட்டடம் வாடகைக்கு விடப்பட்டிருந்தது.

இந்த கட்டடம் மூன்றாம் நபா்கள் ஆக்கிரமிப்பிலிருந்ததால், சட்டபிரிவு 34 -இன் படி வாடகைதாரரின் உரிமையை ரத்து செய்து விட்டு வியாழக்கிழமை வருவாய் மற்றும் காவல் துறை உதவியுடன் சுவாதீனம் பெறப்பட்டது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.1.80 கோடி ஆகும்.

இந்நிகழ்வுகளின்போது இந்து சமய அறநிலையத்துறை சென்னை மண்டல உதவி ஆணையா் எம். பாஸ்கரன், வட்டாட்சியா் (ஆலய நிா்வாகம்) காளியப்பன் மற்றும் திருக்கோயில் அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.