தாயின் தலையில் கல்லை போட்டு கொன்ற சிறுவன்: சத்தியமங்கலத்தில் அதிர்ச்சி!
சத்தியமங்கலத்தில் தாயின் தலையில் கல்லை போட்டு 14 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சத்தியமங்கலத்தில் தாயின் தலையில் கல்லை போட்டு 14 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தனது மகன் சரியாக படிக்காததால் விடுதியில் சேர்க்க தாய் யுவராணி திட்டமிட்டிருந்தார். விடுதியில் சேர விருப்பமில்லாத 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் தாயுடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று இரவு அனைவரும் தூக்கச் சென்ற பிறகு, ஹாலோ பிளாக் கல்லை எடுத்து தாயின் தலையில் மகன் போட்டுள்ளார்.
இதில், பலத்த காயமடைந்த தாய் யுவராணி உயிரிழந்தார். தாயை கொன்ற சிறுவனிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாயை மகனே கல்லை போட்டு கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...