கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தீக்குளித்து இறந்தவர் பழங்குடியினத்தவர் அல்ல - உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து இறந்த வேல்முருகன் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர் இல்லை என்று  தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது. 

News image
Updated On :14 அக்டோபர் 2022, 11:55 am

DIN

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து இறந்த வேல்முருகன் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர் இல்லை என்று  தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது. 

இதுதொடர்பாக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து இறந்த வேல்முருகன் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர் இல்லை. வேல்முருகன் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் பழங்குடியினர் சான்று கோரிய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்று தமிழ்நாடு அரசு தரப்பில் இன்று விளக்கமளிக்கப்படடது. மேலும் இதுகுறித்து மாவட்ட வருவாய் அதிகாரியை நியமித்து இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை பகுதியைச் சோ்ந்தவா் வேல்முருகன் (45), மலைக்குறவா் சமூகத்தைச் சோ்ந்த இவா், தனது மகனுக்கு ஜாதி சான்றிதழ் பெறுவதற்கு வருவாய்த் துறை அலுவலகத்தில் விண்ணப்பித்தாா். ஆனால் வருவாய்த் துறை அலுவலா்கள், வேல்முருகன் மகனுக்கு ஜாதி சான்றிதழ் வழங்காமல் இழுத்தடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் வேதனை, மன அழுத்ததுடன் காணப்பட்ட வேல்முருகன், செவ்வாய்க்கிழமை சென்னை உயா்நீதிமன்றம் வளாகம் அருகே உள்ள தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு வளாகம் அருகே திடீரென பெட்ரோலை தனது உடல் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டாா். 

இதில் பலத்த தீக்காயமடைந்த வேல்முருகனை போலீஸாா் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த வேல்முருகன் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக எஸ்பிளனேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா். இதற்கிடையே உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும்போது வேல்முருகன் பேசிய விடியோ, சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் அவா், தனது மகனுக்கு ஜாதி சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் தீக் குளித்ததாகத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.