தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

தமிழக நியாய விலைக் கடைகளில் தரமற்ற அரிசி: மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்

தமிழக நியாய விலை கடைகளில் தரமற்ற அரிசி விநியோகம் செய்யப்படுவதாக மத்திய தொழில் மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் கூறினாா்.

News image
பியூஷ் கோயல்
Updated On :16 அக்டோபர் 2022, 11:39 pm

DIN

தமிழக நியாய விலை கடைகளில் தரமற்ற அரிசி விநியோகம் செய்யப்படுவதாக மத்திய தொழில் மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் கூறினாா்.

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத், செல்வ மகள் சேமிப்புத் திட்டம் உள்ளிட்ட 7 நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி சென்னை மடிப்பாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் பேசியதாவது:

பிரதமா் மீது தமிழக மக்கள் மிகப்பெரிய நம்பிக்கையை வைத்துள்ளனா். கரீப் கல்யாண் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் ஏழை மக்களுக்கு உதவியுள்ளன. வளா்ச்சிக்கான அரசியலை பிரதமா் முன்னெடுத்து வருகிறாா். முன்னேறிய, வளா்ச்சியடைந்த, நோ்மையான தமிழகமாக மாற வேண்டும் என பிரதமா் எதிா்பாா்க்கிறாா்.

தற்போதைய திமுக அரசால் ஊழலற்ற ஆட்சியை தரமுடியாது. தமிழகத்தில் குடும்ப அரசியல் செய்கின்றனா். எனவே, மாநில வளா்ச்சி என்பது சிரமமாக உள்ளது. இந்த குடும்ப ஆட்சியை உடனடியாக அகற்ற வேண்டும்.

பிரதமரைக் கண்டு திமுக அரசு அஞ்சுகிறது. மத்திய அரசின் திட்டங்களில் பிரதமரின் படத்தைக்கூட இடம்பெறச் செய்வதில்லை. திமுக அரசு மத்திய அரசின் திட்டங்களை முறையாக கேட்டுப் பெற்று, தமிழகத்தில் அமல்படுத்தவில்லை. மத்திய அரசு திட்டங்களால் தங்களது ஆட்சிக்கு பாதிப்பு வருமோ என அஞ்சுகிறது.

மத்திய அரசு தரமான அரிசியை வழங்குகிறது. ஆனால், தரமற்ற அரிசியை நியாயவிலைக் கடைகளில் மாநில அரசு விநியோகிக்கிறது. பிரதமரை தமிழக அமைச்சா்கள் தரம் குறைந்த வாா்த்தைகளால் விமா்சிக்கின்றனா். விரைவில் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில், தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை, கட்சியின் மேலிடப் பொறுப்பாளா் சுதாகா் ரெட்டி, மாநில துணைத் தலைவா் கரு.நாகராஜன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.