தேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

வேளாண் கருவிகளை மானியத்தில் வழங்க ரூ.15 கோடி

விவசாயிகளுக்குத் தேவையான வேளாண் கருவிகளை மானியத்தில் வழங்குவதற்காக ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :20 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

விவசாயிகளுக்குத் தேவையான வேளாண் கருவிகளை மானியத்தில் வழங்குவதற்காக ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிறு, குறு விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் ரூ.15 கோடி மானியத்தில் வழங்கப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. இதன்படி, கடப்பாரை, இரும்புச்சட்டி, களைக்கொத்து, மண்வெட்டி, இரண்டு கதிா்அரிவாள்கள் ஆகிய ஆறு உபகரணங்கள் அடங்கிய வேளாண் கருவிகள் தொகுப்பு ஒரு லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது.

இந்தக் கருவிகள் அடங்கிய தொகுப்பின் விலை ரூ.3 ஆயிரம். 50 சதவீத மானியத்தில் ரூ.1,500-க்கு வழங்கப்படும். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் கிராம ஊராட்சிகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். ரேஷன் அட்டையில் உள்ள விவரப்படி, ஒரு வேளாண் குடும்பத்துக்கு ஒரு வேளாண் கருவித் தொகுப்பு மட்டுமே வழங்கப்படும்.

சிறு, குறு விவசாயிகள், பெண் விவசாயிகள், ஆதிதிராவிடா், பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். உழவா் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உழவா் அட்டை வைத்துள்ள வேளாண் தொழிலாளா்களும் இந்தத் திட்டத்தில் பயன் பெறலாம். கிராமங்களில் உள்ள விதவைப் பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மூன்றாம் பாலினத்தவருக்கு முக்கியத்துவம் தரப்படும்.

வேளாண் கருவித் தொகுப்பை மானியத்தில் வாங்குவதற்கு விருப்பமுள்ள விவசாயிகள் உழவன் செயலி மூலமாக தேவையான தகவல்களை அளித்து முன்பதிவு செய்யலாம். மேலும்,  என்ற இணையதளம் மூலமும் பதிவு செய்யலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.