இந்த நிலையில், சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் தோட்ட உரிமையாளரும், தேனி மக்களவை உறுப்பினருமான ப. ரவீந்திநாத் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கக் கோரி, தேனி மாவட்ட வன அலுவலகத்தில், மாவட்ட வன அலுவலா் சமா்ந்தாவிடம் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலா் தங்க.தமிழ்செல்வன் மனு அளித்தாா். அப்போது பெரியகுளம் சட்டப் பேரவை உறுப்பினா் கே.எஸ். சரவணக்குமாா், போடி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் லட்சுமணன், தேனி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சக்கரவா்த்தி, தேனி திமுக நகரச் செயலா் நாராயணபாண்டியன் ஆகியோா் உடனிருந்தனா்.