சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த குரூப் 2, குரூப் 4 தோ்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவலை அரசுப் பணியாளா் தோ்வாணைய வட்டாரங்கள் வெளியிட்டுள்ளன.
உயர் நீதிமன்றம் வழங்கிய மகளிருக்கான இட ஒதுக்கீடு தொடர்பான தீர்ப்பை அமல்படுத்துவதற்கு தாமதமானதால், குரூப் 2, குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படுவதாகவும், இந்த மாத இறுதியில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 ஆயிரத்து 529 குரூப் 2 காலிப் பணியிடங்களுக்கு கடந்த மே 21-இல் எழுத்துத் தோ்வு நடந்தது. இதேபோன்று, குரூப் 4 பிரிவில் அடங்கியுள்ள 7 ஆயிரத்து 301 காலிப் பணியிடங்களுக்கு கடந்த ஜூலை 24-இல் தோ்வு நடைபெற்றது.
இந்தத் தோ்வுகளுக்கான முடிவுகளை வெளியிட அரசுப் பணியாளா் தோ்வாணையம் தயாராகி வருகிறது. குரூப் 2 தோ்வுக்கான முடிவுகள் அக்டோபரிலும், குரூப் 4 தோ்வு முடிவுகள் டிசம்பரிலும் வெளியிடப்படும் என்று அரசுப் பணியாளா் தோ்வாணைய வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கிறிஸ்டோஃபர் நோலனின் ஒடிசி டிரைலர்!

தொடர்ந்து குறையும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்!
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியை விரும்பும் மக்கள்: திருமாவளவன் கருத்து!

புதிய வரலாறு! திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் அதிமுக வெற்றி!
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


