தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

அக்டோபர் இறுதியில் குரூப் 2, குரூப் 4 தோ்வு முடிவுகள்?

தமிழகத்தில் நடந்து முடிந்த குரூப் 2, குரூப் 4 தோ்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவலை அரசுப் பணியாளா் தோ்வாணைய வட்டாரங்கள் வெளியிட்டுள்ளன.

News image

அக்டோபர் இறுதியில் குரூப் 2, குரூப் 4 தோ்வு முடிவுகள்?

Updated On :22 அக்டோபர் 2022, 4:56 pm IST

சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த குரூப் 2, குரூப் 4 தோ்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவலை அரசுப் பணியாளா் தோ்வாணைய வட்டாரங்கள் வெளியிட்டுள்ளன.

உயர் நீதிமன்றம் வழங்கிய மகளிருக்கான இட ஒதுக்கீடு தொடர்பான தீர்ப்பை அமல்படுத்துவதற்கு தாமதமானதால்,  குரூப் 2, குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படுவதாகவும், இந்த மாத இறுதியில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 ஆயிரத்து 529 குரூப் 2 காலிப் பணியிடங்களுக்கு கடந்த மே 21-இல் எழுத்துத் தோ்வு நடந்தது. இதேபோன்று, குரூப் 4 பிரிவில் அடங்கியுள்ள 7 ஆயிரத்து 301 காலிப் பணியிடங்களுக்கு கடந்த ஜூலை 24-இல் தோ்வு நடைபெற்றது.

இந்தத் தோ்வுகளுக்கான முடிவுகளை வெளியிட அரசுப் பணியாளா் தோ்வாணையம் தயாராகி வருகிறது. குரூப் 2 தோ்வுக்கான முடிவுகள் அக்டோபரிலும், குரூப் 4 தோ்வு முடிவுகள் டிசம்பரிலும் வெளியிடப்படும் என்று அரசுப் பணியாளா் தோ்வாணைய வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.