தமிழகத்தில் கடந்த 3 நாள்களில் மது விற்பனை எவ்வளவு தெரியுமா?

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் கடந்த 3 நாள்களில் ரூ.708 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் கடந்த 3 நாள்களில் ரூ.708 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

தீபாவளி பண்டிகையான நேற்று மட்டும் ரூ.244 கோடிக்கு டாஸ்மாக்கில் மதுபானங்கள் விற்பனையாகின.

தமிழகத்தில் பண்டிகைக் காலங்களில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அதிகரிப்பது வழக்கம். இதில் இதர பண்டிகைகளை விட தீபாவளி பண்டிகைக்கு இதன் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது.

சென்னை மண்டலம்-ரூ.48.80 கோடி, திருச்சி-ரூ.47.78 கோடி, சேலம்-ரூ.49.21 கோடி, மதுரை-52.87 கோடி, கோவை-ரூ.45.42 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com