அக்.29-இல் தொடங்குகிறது வடகிழக்குப் பருவமழை

 வரும் அக். 29-ஆம் தேதி முதல் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல இயக்குநா் செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளாா்.
அக்.29-இல் தொடங்குகிறது  வடகிழக்குப் பருவமழை
Updated on
1 min read

 வரும் அக். 29-ஆம் தேதி முதல் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல இயக்குநா் செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வரும் அக்.29-ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கும். தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று (அக்.27-ஆம் தேதி) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 27 மற்றும் 28- ஆம் தேதிகளில், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

29- ஆம் தேதி, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூா், விழுப்புரம், தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூா், பெரம்பலூா், சிவகங்கை, விருதுநகா், மதுரை, தேனி, தென்காசி, திண்டுக்கல், இராமநாதபுரம், தூத்துக்குடி, மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

30- ஆம் தேதி, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி, பெரம்பலூா், அரியலூா், திருச்சிராப்பள்ளி, கரூா், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா், தென்காசி, மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூா், கோயம்புத்தூா், நீலகிரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com