மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30,000 கனஅடியாக சரிவு

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை தனிந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 30,000 கன அடியாக சரிந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மேட்டூர்: காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை தனிந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 30,000 கன அடியாக சரிந்தது.

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை தனிந்ததால் செவ்வாய்க்கிழமை மாலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 30,000 கன அடியாக சரிந்தது.  புதன்கிழமை காலை 2 ஆவது நாளாக நீர்வரத்து 30,000 கன அடியாக தொடர்ந்தது. அணைக்க வரும் நீரின் அளவு சரிந்ததால் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் வினாடிக்கு  30,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.  

நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 21,500 கன அடி நீரும், உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 8,500 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com