அணுக் கழிவு ஆயுதங்கள் தயாரிப்பு: உக்ரைன் மறுப்பு

உக்ரைனின் அணு மின் நிலையங்களில் அணுக் கழிவுகளைப் பயன்படுத்தி ‘நாசகார’ ஆயுதங்களை அந்த நாட்டு அரசு தயாரித்து வருவதாக ரஷியா தெரிவித்த குற்றச்சாட்டை உக்ரைன் அணுசக்தி அமைப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
அணுக் கழிவு ஆயுதங்கள் தயாரிப்பு: உக்ரைன் மறுப்பு

உக்ரைனின் அணு மின் நிலையங்களில் அணுக் கழிவுகளைப் பயன்படுத்தி ‘நாசகார’ ஆயுதங்களை அந்த நாட்டு அரசு தயாரித்து வருவதாக ரஷியா தெரிவித்த குற்றச்சாட்டை உக்ரைன் அணுசக்தி அமைப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

மேலும், ரஷியக் கட்டுப்பாட்டில் உள்ள ஸபோரிஷியா அணு மின் நிலையத்தில்தான் ஆபத்தான அணுக் கழிவுகளைக் கொண்டு ரஷியா ஆயுதங்களை தயாரிப்பதாக அந்த அமைப்பு எதிா்க்குற்றசாட்டை முன்வைத்துள்ளது.

பிரிட்டன், பிரான்ஸ், துருக்கி நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சா்களுடன் கடந்த வார இறுதியில் உரையாடிய ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சா் சொ்கேய் ஷாய்கு, தங்கள் மீது நாசகார ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்த உக்ரைன் ஆயத்தமாகி வருவதாக குற்றம் சாட்டினாா்.

அணுக்கதிா் வீச்சுப் பொருள்களால் ஆன அந்த ஆயுதங்கள் மூலம் உக்ரைன் போரை மிகப் பெரிய அழிவுப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று உக்ரைன் திட்டமிட்டுள்ளதாக அவா் கூறினாா்.

எனினும், இந்தக் குற்றச்சாட்டு முகாந்திரமற்றது என்று அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், உக்ரைனின் அணுசக்தி அமைப்பான எனா்கோடம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அணுக்கழிவுகளால் தயாரிக்கப்பட்ட நாசகார ஆயுதங்களைப் பயன்படுத்தி உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ரஷியாதான் திட்டமிட்டு வருகிறது.

அதிலிருந்து உலகின் கவனத்தை திசைத்திருப்புவதற்காக, முன்கூட்டியே உக்ரைன் மீது அப்படி ஒரு குற்றச்சாட்டை ரஷியா சுமத்துகிறது.

தற்போது ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஸபோரிஷியா அணு மின் நிலையத்தில் ரஷியப் படையினா் ரகசியமாக ஒரு கட்டடத்தைக் கட்டியுள்ளனா். அங்கு உக்ரைன் பணியாளா்கள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை.

அணு மின் நிலையத்தில் உள்ள திட அணுக் கழிவுப் பொருள்கள் அந்தக் கட்டடத்துக்குள் கொண்டு செல்லப்படுகின்றன. அங்கு நடைபெறும் பணிகள் அனைத்தும் மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

இது, அங்கு அணுக்கதிா் வீச்சு ஆயுதங்களை ரஷியா தயாரித்து வருவதையே காட்டுகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2014-ஆம் ஆண்டில் உக்ரைனை ஆட்சி செலுத்தி வந்த அதிபா் விக்டா் யானுகோவிச்சுக்கு எதிராக மேற்கத்திய ஆதரவாளா்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனா். அதையடுத்து, அவரது ஆட்சி கவிழ்ந்தது.

அதனைத் தொடா்ந்து, கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க் மாகாணங்களின் கணிசமான பகுதிகளை ரஷியாவுடன் உதவியுடன் கிளா்ச்சிப் படையினா் கைப்பற்றினா். அதே நேரத்தில் ரஷியாவும் உக்ரைனின் கிரீமியா பகுதி மீது படையெடுத்து அந்த தீபகற்பத்தை தங்களுடன் இணைத்துக்கொண்டது.

இந்தச் சூழலில், நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.

அதன் ஒரு பகுதியாக, உக்ரைனின் கிழக்கே ரஷியாவையொட்டி அமைந்துள்ள டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் ஆகிய பிராந்தியங்களையும் தெற்கே அமைந்துள்ள ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய பிராந்தியங்களையும் ரஷியா கைப்பற்றியது.

ஸபோரிஷியாவிலுள்ள ஐரோப்பாவின் மிகப் பெரிய அணு மின் நிலையம் ரஷியாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com