மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 10 பேர் படுகாயம்!

உலிபுரத்தில் தனியார் பள்ளிப் பேருந்தும், தனியார் பேருந்தும் வளைவில் நேருக்கு நேர் மோதியதில் 10-க்கும் மேற்பட்டோர் பலத்தக் காயமடைந்தனர்.

News image
Updated On :26 அக்டோபர் 2022, 3:36 pm

தம்மம்பட்டி: உலிபுரத்தில் தனியார் பள்ளிப் பேருந்தும், தனியார் பேருந்தும் வளைவில் நேருக்கு நேர் மோதியதில் 10-க்கும் மேற்பட்டோர் பலத்தக் காயமடைந்தனர்.

Story image

தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டி பகுதியில் செயல்பட்டுவரும் ஒரு தனியார் பள்ளியின் பேருந்து, புதன்கிழமை மாலை 6.30 மணி அளவில் உலிபுரம் பகுதியில் பள்ளி மாணவ, மாணவிகளை இறக்கிவிட்டு திரும்பிக்கொண்டிருந்தது. அந்தப் பேருந்தை பழனிச்சாமி என்பவர் ஓட்டிச்சென்றார்.

அப்போது, தம்மம்பட்டியிலிருந்து ராசிபுரம் நோக்கி, ஒரு தனியார் பேருந்து சென்றுகொண்டிருந்தது. அந்த பேருந்தை வெங்காயபாளையத்தை சேர்ந்த மாரிமுத்து(45),என்பவர் ஓட்டிச்சென்றார். இரண்டு பேருந்துகளும் உலிபுரத்தில், ஒரு வளைவில் ஒலிப்பான் அடிக்காமல் சென்றதாக கூறப்படுகிறது.

Story image

இதனால் இருபேருந்துகளும் நேருக்கு நேர் மோதிய விபத்துக்குள்ளானது. இதில் தனியார் பள்ளியின் பேருந்து ஓட்டுநர் பழனிச்சாமி(46) , தனியார் பேருந்து ஓட்டுநர் மாரிமுத்து(45) பலத்தக் காயமடைந்தனர். மேலும் தனியார் பேருந்தில் பயணித்த தண்ணீர்ப் பந்தல் தனுஷ்(20), தம்மம்பட்டி கனகவல்லி(64), நாமகிரிப்பேட்டை பாப்பாத்தி(60), ராஜபாளையம் நாகராஜ்(67), செல்லம்(60), மாதேஸ்வரி(55) உள்பட 10க்கும் மேற்பட்டவர்கள் பலத்தக்காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் தம்மம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஆத்தூர் அரசு பொதுமருத்துவமனை உள்ளிட்டவைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து தம்மம்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.