திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

மணப்பாறை அருகே தேங்காய் நார் ஆலையில் தீ: பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்!

மணப்பாறை அடுத்த அதிகாரம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தேங்காய் நார் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகி இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

News image
திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அதிகாரம் என்னுமிடத்தில் உள்ள தேங்காய் நார் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தால் அந்த பகுதி புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.  
Updated On :1 பிப்ரவரி 2024, 10:40 am

DIN

மணப்பாறை அடுத்த அதிகாரம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தேங்காய் நார் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகி இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் துவரங்குறிச்சிக்கு அருகே உள்ள அதிகாரம் என்னுமிடத்தில் கார்த்திகேயன் என்பருக்கு சொந்தமான தேங்காய் நார் ஆலை உள்ளது. சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆலையில் நூற்றுக்கணக்கானோர் பணியாற்றி வரும் நிலையில், தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு பணியாளர்கள் யாரும் பணிக்கு வரவில்லை. 

இந்நிலையில், ஆலையில் தற்போது ஏற்பட்ட தீ விபத்தில் அங்கிருந்த மஞ்சு, நார், தேங்காய் மட்டைகள் என பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் தொடர்ந்து எரிந்து வருகிறது. இந்த தீ விபத்தினால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்து வருகிறது. 

Story image

தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் தீயணைப்புத்துறையினர்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த துவரங்குறிச்சி தீயணைப்புத்துறையினர் முதற்கட்டமாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும், தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாததால் அருகிலுள்ள மணப்பாறை, பொன்னமராவதி பகுதிகளிலிருந்தும் தீயணைப்புத்துறை வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், தனியார் தண்ணீர் லாரிகளும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. பணியாளர்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது. 

இந்த விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீஸார் விசாரணை மேற்கோண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.