திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

வயநாட்டில் மக்களை அச்சுறுத்தி வந்த புலி கூண்டில் சிக்கியது!

வயநாடு மாவட்டத்தில் கிராம மக்களை அச்சுறுத்தி வந்த புலி இன்று அதிகாலை கூண்டில் சிக்கியது.

News image
Updated On :28 அக்டோபர் 2022, 12:38 pm

கூடலூர்: வயநாடு மாவட்டத்தில் கிராம மக்களை அச்சுறுத்தி வந்த புலி இன்று அதிகாலை கூண்டில் சிக்கியது.

கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் சீரால் கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக புலி ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வளர்ப்புப் பிராணிகளை தூக்கிச் சென்றும், பொதுமக்களை அச்சுறுத்தி  வந்தது.


இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வனத்துறையினரை கண்டித்து பல கட்ட போராட்டங்களை நடத்தினர். இதனால் கேரளா வனத்துறை ஊருக்குள் வரும் அந்த புலியை பிடிக்க முடிவு செய்தது. 

புலி நடமாட்டம் உள்ள பகுதிகளில் வனத்துறை கூண்டு வைத்து கண்காணித்து வந்தது. தொடர்ந்து ஏமாற்றி வந்த புலி 33 நாள்களுக்குப் பிறகு கூண்டில் சிக்கியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.