விடுதலைப் போராட்ட வீரா் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் 115-ஆவது ஜயந்தி விழா மற்றும் 60-ஆவது குருபூஜை விழாவினையொட்டி மதுரை - கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர்
ஓ. பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
தாய்நாட்டின் விடுதலைக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தன்னை முழுமையாக அர்பணித்து, ஆன்மீகத்தையும், நாட்டையும் இருகண்களாய் போற்றிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜயந்தி விழா மற்றும் குருபூஜை விழா நாளில் அவரை போற்றி வணங்குகிறேன் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
இதையும் படிக்க | முத்துராமலிங்கத் தேவருக்கு வெள்ளி கவசம்: ஓபிஎஸ்