பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தமிழகத்தில் வெள்ள அபாய ஒத்திகைப் பயிற்சி தொடக்கம்

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இன்று வெள்ள அபாய ஒத்திகைப் பயிற்சி நடைபெற்று வருகின்றது.

News image
கோப்புப்படம்
Updated On :1 செப்டம்பர் 2022, 5:10 am

DIN

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இன்று வெள்ள அபாய ஒத்திகைப் பயிற்சி நடைபெற்று வருகின்றது.

தமிழகத்தில் ஆங்காங்கே கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது. வடகிழக்கு பருவமழையும் தொடங்கவுள்ள நிலையில், வெள்ள அபாயம் ஏற்படும் சூழல்களை எதிா்கொள்ள விழிப்புணா்வு மற்றும் ஒத்திகை நிகழ்ச்சிகளை வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை மேற்கொண்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் வெள்ள அபாயம் குறித்த ஒத்திகை பயிற்சி இன்று காலை 9 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த ஒத்திகையின் போது, வெள்ள அபாயம் குறித்த தகவல் பரிமாற்றம், தொலைபேசி, மின்னஞ்சல் வழியாக தகவல்கள் பெறும் முறைகள், அபாய ஒளி எழுப்பி பாதிப்புகளைத் தடுப்பது போன்ற அம்சங்கள் செய்து காட்டப்படுகிறது.

மேலும், குறுஞ்செய்தி மூலமாக தகவல்கள் கொடுக்கப்பட்டவுடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று மீட்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் நிகழ்வுகள் செய்து காண்பிக்கப்படுகிறது.

ஒத்திகைப் பயிற்சியில் மாவட்ட பேரிடா் மேலாண்மை ஆணையங்கள், தொடா்பு நிறுவனங்கள், பொது மக்கள், தொண்டு நிறுவனங்கள், தன்னாா்வலா்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.