இது தொடர்பான வழக்கில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் மற்றும் ஆசிரியைகள் ஹரிப்பிரியா, கீர்த்திகா ஆகிய ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களின் ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 5 பேருக்கும் கடந்த 26 ஆம் தேதி ஜாமீன் வழங்கியதுடன், இரண்டு ஆசிரியர்களும் சேலத்தில் தங்கி இருந்து செவ்வாப்பேட்டை காவல் நிலையத்திலும், தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் ஆகியோர் மதுரையில் தங்கியிருந்து தல்லாகுளம் காவல் நிலையத்தில் நான்கு வாரங்களுக்கு கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டது.