சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் ஜாமீன்: காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட தனியார் பள்ளி நிர்வாகிகள்

கள்ளக்குறிச்சி அருகே பிளஸ் 2 மாணவி உயிரிழந்த வழக்கில் ஜாமீன் பெற்ற தனியார் பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர் ஆகியோர் மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டனர்.

News image
Updated On :2 செப்டம்பர் 2022, 6:48 am

DIN

கள்ளக்குறிச்சி அருகே பிளஸ் 2 மாணவி உயிரிழந்த வழக்கில் ஜாமீன் பெற்ற தனியார் பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர் ஆகியோர் மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்த பிளஸ் 2 மாணவி கடந்த ஜூலை 13 ஆம் தேதி மர்மமான முறையில் மரணமடைந்தார்.

இது தொடர்பான வழக்கில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் மற்றும் ஆசிரியைகள் ஹரிப்பிரியா, கீர்த்திகா ஆகிய ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களின் ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 5 பேருக்கும் கடந்த 26 ஆம் தேதி ஜாமீன் வழங்கியதுடன், இரண்டு ஆசிரியர்களும் சேலத்தில் தங்கி இருந்து செவ்வாப்பேட்டை காவல் நிலையத்திலும், தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் ஆகியோர் மதுரையில் தங்கியிருந்து தல்லாகுளம் காவல் நிலையத்தில் நான்கு வாரங்களுக்கு கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டது.

இதன்படி, ரவிக்குமார், சாந்தி, சிவசங்கரன் ஆகியோர் வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு சென்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.