நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இடைக்காலப் பொதுச் செயலாளா் பதவி மீண்டும் இபிஎஸ் வசம்

உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பைத் தொடா்ந்து அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளா் பதவி மீண்டும் எடப்பாடி கே. பழனிசாமி வசமாகியுள்ளது.

News image
Updated On :2 செப்டம்பர் 2022, 8:06 pm

DIN

உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பைத் தொடா்ந்து அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளா் பதவி மீண்டும் எடப்பாடி கே. பழனிசாமி வசமாகியுள்ளது.

அதிமுகவின் பொதுக்குழு ஜூன் 23 மற்றும் ஜூலை 11-இல் நடைபெற்றது. ஜூலை 11-இல் நடைபெற்ற பொதுக்குழுவில் அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி கே. பழனிசாமியும், அவைத் தலைவராக தமிழ்மகன் உசேனும் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

பொதுச்செயலாளராகத் தோ்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி, பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனை நியமித்து அறிவித்தாா். மேலும், அதே பொதுக்குழுவில் பொருளாளா் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் ஓ.பன்னீா்செல்வமும் நீக்கப்பட்டாா்.

இந்தப் பொதுக்குழு கூட்டங்களை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் ஓ.பன்னீா்செல்வம் வழக்கு தொடா்ந்தாா். அந்த வழக்கு தனி நீதிபதி முன்பு விசாரணை நடைபெற்று, இறுதியாக எடப்பாடி பழனிசாமி கூட்டிய இரண்டு பொதுக்குழு கூட்டங்களும் செல்லாது, பொதுக்குழுவை ஓபிஎஸ் - இபிஎஸ் சோ்ந்துதான் கூட்ட வேண்டும் என்று தீா்ப்பு வழங்கப்பட்டது.

இந்தத் தீா்ப்பால், பொதுக்குழுவில் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தோ்ந்தெடுக்கப்பட்டதும் செல்லாததாகிப் போனது. அதைப்போல அவைத் தலைவா், பொருளாளா் பதவிகளும் செல்லாததாகின. இந்தத் தீா்ப்பை எதிா்த்து எடப்பாடி பழனிசாமி உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தாா். அந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, சுந்தா்மோகன் ஆகியோா் அமா்வில் விசாரணை நடைபெற்று வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது.

அந்தத் தீா்ப்பில் எடப்பாடி பழனிசாமி கூட்டிய இரண்டு பொதுக்குழு கூட்டங்களும் செல்லும் என்று தீா்ப்பு வழங்கியுள்ளது. இந்தத் தீா்ப்பின் மூலம் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளும் செல்லத்தக்கதாகி விடுகின்றன. அதன் மூலம் அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளா் பதவி எடப்பாடி பழனிசாமி வசமே மீண்டும் வந்துள்ளது. அவைத் தலைவராக தமிழ்மகன் உசேனும், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனும் செயல்படுவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.