செப்.8-ல் எந்தெந்த மாவட்டங்களுக்கு உள்ளூா் விடுமுறை?

ஓணம் பண்டிகையையொட்டி, சென்னை உள்பட ஒன்பது மாவட்டங்களுக்கு செப்.8 ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்.8-ல் எந்தெந்த மாவட்டங்களுக்கு உள்ளூா் விடுமுறை?


ஓணம் பண்டிகையையொட்டி, சென்னை உள்பட ஒன்பது மாவட்டங்களுக்கு செப்.8 ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பொதுத் துறை துணைச் செயலாளா் எஸ்.அனு வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: 

ஓணம் பண்டிகை வரும் 8 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளதையொட்டி, சென்னை, திருப்பூா், கோவை, கன்னியாகுமரி, நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களுக்கு ஏற்கெனவே உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களைத் தொடா்ந்து, ஈரோடு, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கும் ஓணம் பண்டிகையன்று உள்ளூா் விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com