சென்னை: காவல் துறை பாதுகாப்புடன் சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு வந்த ரெளடி பாலாவை கொலை செய்ய முயற்சி செய்தனர்.
நீதிமன்ற வளாகத்தில் கத்தியுடன் கூலிப்படை தலைவன் மதுரை பாலாவை கொலை செய்ய வந்த 5 பேர் கொண்ட கும்பலால் பரபரப்பு ஏற்பட்டது. 2 பேர் தப்பியோடிய நிலையில் 3 பேரை பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிடிபட்ட 3 பேரிடம் இருந்து 3 கத்திகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிக்க: ஜெயம் ரவியின் ‘சைரன்’ படத்தில் இணைந்த மலையாள நடிகை!
மயிலாப்பூரை சேர்ந்த பிரபல ரெளடி சிவக்குமாரை கொலை செய்த வழக்கில் ரெளடி பாலா சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். இந்நிலையில் ரெளடி பாலாவை கொலை செய்ய முயற்சி செய்தனர்.