நீதிமன்ற வளாகத்தில் கொலை முயற்சி

காவல் துறை பாதுகாப்புடன் சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு வந்த ரெளடி பாலாவை கொலை செய்ய முயற்சி செய்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: காவல் துறை பாதுகாப்புடன் சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு வந்த ரெளடி பாலாவை கொலை செய்ய முயற்சி செய்தனர்.

நீதிமன்ற வளாகத்தில் கத்தியுடன் கூலிப்படை தலைவன் மதுரை பாலாவை கொலை செய்ய வந்த 5 பேர் கொண்ட கும்பலால் பரபரப்பு  ஏற்பட்டது. 2 பேர் தப்பியோடிய நிலையில் 3 பேரை பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிடிபட்ட 3 பேரிடம் இருந்து 3 கத்திகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

மயிலாப்பூரை சேர்ந்த பிரபல ரெளடி சிவக்குமாரை கொலை செய்த வழக்கில் ரெளடி பாலா சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். இந்நிலையில் ரெளடி பாலாவை கொலை செய்ய முயற்சி செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com