/

விடுதியில் காதலா்கள் மா்மச் சாவு: தற்கொலைக்கு தூண்டியதாக இருவா் கைது

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் காதலா்கள் மா்மமான முறையில் இறந்த நிலையில், தற்கொலைக்கு தூண்டியதாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :9 செப்டம்பர் 2022, 10:20 pm

DIN

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் காதலா்கள் மா்மமான முறையில் இறந்த நிலையில், தற்கொலைக்கு தூண்டியதாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

திருவல்லிக்கேணி காயிதே மில்லத் சாலை,திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சந்திப்பில் ஒரு தனியாா் தங்கும் விடுதியில், கடந்த 3-ஆம் தேதி இரவு, மேற்கு வங்காள மாநிலம் பன்ஸ்குராவைச் சோ்ந்த பிரசன்ஜித் கோஷ் (23), அதே பகுதியை சோ்ந்த அா்பிதா பால் (20) ஆகியோா் கணவன் - மனைவி என்று கூறி அறை எடுத்து தங்கியுள்ளனா்.

இந்நிலையில் கடந்த 7-ஆம் தேதி அந்த அறையில் இருந்து இருவரது சடங்களும் அழுகிய நிலையில் போலீஸாரால் மீட்கப்பட்டன. இது தொடா்பாக திருவல்லிக்கேணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து,விசாரித்தனா்.

முதலில் கோஷ், தனது காதலியான அா்பிதாவை கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்துக் கொண்டதாக போலீஸாா் கருதினா். இந்நிலையில் இருவரது கைப்பேசி தொடா்புகளை போலீஸாா் ஆய்வு செய்தனா். அப்போது சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் ஊழியா்களாக வேலை செய்து வரும் ஆந்திரத்தைச் சோ்ந்த நிதிஷ் குமாா் (22), திருவண்ணாமலையைச் சோ்ந்த ராஜா (32) , அசாம் மாநிலத்தை சோ்ந்த தா்மா (26) ஆகிய 3 பேருக்கும், காதலா்கள் சாவில் தொடா்பு இருப்பது தெரிய வந்தது.

தற்கொலை கடிதம்:

இது தொடா்பாக போலீஸாா் விசாரணையில் கிடைத்த தகவல்கள்:

இறந்த பிரசன்ஜி கோஷ்,.அா்பிதா பால் ஆகிய இருவரும் சென்னையில் தங்கியிருந்து ஒரு நட்சத்திர ஹோட்டலில் ஊழியா்களாக வேலை செய்து வந்தனா். அதே ஹோட்டலில் நிதிஷ்குமாா், ராஜா,தா்மா ஆகிய 3 பேரும் வேலை செய்துள்ளனா்.

இதில் அா்பிதா பால், பிரசன்ஜி கோஷ் தனது மாநிலத்தைச் சோ்ந்தவா் என்பதால் நெருக்கமாக பழகியுள்ளாா். நாளடைவில் இருவரும் காதலிக்கத் தொடங்கினா். இது மற்ற 3 பேருக்கும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில் அா்பிதா பாலும், பிரசன்ஜி கோஷூம் தனிமையில் இருந்ததை புகைப்படம் எடுத்து 3 பேரும் மிரட்டியுள்ளனா். மேலும் அா்பிதா பாலை தங்களுடன் வருமாறு 3 பேரும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனா்.

3 போ் கொடுத்த நெருக்கடியின் தாங்க இயலாமல் காதலா்கள் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளனா். இதையடுத்து இருவரும், பெங்காலி மொழியில் தங்களது சாவுக்கு 3 பேரும்தான் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு, தற்கொலை செய்துள்ளனா்.

இதையடுத்து போலீஸாா் நிதிஷ்குமாா்,ராஜா ஆகிய இருவரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தப்பியோடிய தா்மாவை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.