சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மேட்டூர் அணை நீர்வரத்து குறைந்தது!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்தும் நீர் திறப்பும் 80,000 கனஅடியாகக் குறைந்தது. 

News image
மேட்டூர் அணை (கோப்புப்படம்)
Updated On :9 செப்டம்பர் 2022, 6:38 am

DIN

மேட்டூர் அணைக்கு நீர்வரத்தும் நீர் திறப்பும் 80,000 கனஅடியாகக் குறைந்தது. 

கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பு மற்றும் காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. 

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் நேற்று காலை 1.25 லட்சம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 80,000 கன அடியாகக் குறைந்துள்ளது.

தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. அங்குள்ள 
அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டும் நிலையில் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை நீடிக்கிறது.

இதேபோல், மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகமாக உள்ளது. நேற்று காலை நீர்வரத்து 1.25 லட்சம் கனஅடியாக இருந்த நிலையில் இன்று அணைக்கு நீர்வரத்து 80 ஆயிரம் கன அடியாகக் குறைந்துள்ளது.

அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவும் வினாடிக்கு 80,000 கன அடியாக உள்ளது. நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23,000 கன அடி நீரும், உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 57,000 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 98.47 டி.எம்.சியாகவும் உள்ளது.

மேட்டூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்து வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து 80,000 கன அடி நீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருவதால் காவிரி பாயும் 12 டெல்டா மாவட்ட கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்து நீடிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.