எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அரக்கோணம் அருகே தீப்பற்றி எரிந்த பள்ளிப் பேருந்து: மாணவிகள் உயிர் தப்பினர்!

அரக்கோணம் அருகே சனிக்கிழமை பள்ளி மாணவிகளை அழைத்து வந்து கொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில் 10 மாணவிகள் உயிர் தப்பினர்.

News image
Updated On :10 செப்டம்பர் 2022, 7:58 am

DIN

அரக்கோணம்: அரக்கோணம் அருகே சனிக்கிழமை பள்ளி மாணவிகளை அழைத்து வந்து கொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில் 10 மாணவிகள் உயிர் தப்பினர்.

அரக்கோணம் ஜோதி நகரில் உள்ள தனியார் பள்ளியின் பேருந்து சனிக்கிழமை பள்ளிக்கு மாணவிகளை ஏற்றிக்கொண்டு வரும்போது அரக்கோணம் அருகே உள்ள சேந்தமங்கலத்தில் காஞ்சிபுரம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்தது.

உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டு மாணவிகளும் ஓட்டுநரும் நடத்துநரும் கீழே இறங்கினர். இச்சம்பவத்தில் பள்ளிப் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானது. அரக்கோணம் தீயணைப்புத் துறையினர் நேரில் வந்து தீயை அணைத்தனர்.

இச்சம்பவம் குறித்து  நெமிலி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிப் பேருந்து தீப்பற்றி எரிந்த சம்பவம் அரக்கோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.