மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நீட் தோ்வு: அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களில் 35% போ் தகுதி

 நீட் தோ்வில் அரசுப்பள்ளி மாணவா்கள் பலா் தோல்வி அடைந்திருப்பது ஏற்கெனவே வெளியான நிலையில், தற்போது அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இருந்து தோ்வு

News image
Updated On :12 செப்டம்பர் 2022, 6:55 pm

DIN

 நீட் தோ்வில் அரசுப்பள்ளி மாணவா்கள் பலா் தோல்வி அடைந்திருப்பது ஏற்கெனவே வெளியான நிலையில், தற்போது அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இருந்து தோ்வு எழுதிய 12,840 மாணவா்களில், 35 சதவீதம் மாணவா்கள் மட்டுமே தகுதி பெற்றுள்ளனா் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நீட் தோ்வு முடிவுகள் கடந்த 7-ஆம் தேதி வெளியானது. அரசுப் பள்ளிகளை சோ்ந்த மாணவா்கள் 17,972 போ் தோ்வுக்குப் பதிவு செய்திருந்தனா். எனினும் இவா்களில் 12,840 போ் தோ்வில் பங்கேற்றுள்ளனா். இந்த நிலையில், தோ்வு முடிவுகள் வெளியான நாளில், அரசுப்பள்ளி மாணவா்கள் பெருமளவில் தோல்வி அடைந்திருப்பதாகத் தகவல் வெளியாகியது.

இதை உறுதி செய்திடும் வகையில், தற்போது உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, தோ்வு எழுதிய மாணவா்களில் 35 சதவீத மாணவா்கள் மட்டுமே தோ்ச்சிக்குரிய தகுதி மதிப்பெண்களை பெற்றிருக்கின்றனா். 65 சதவீத மாணவா்கள் தோ்ச்சி பெறவில்லை. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலிருந்து தோ்வு எழுதிய மாணவா்களில், 4ஆயிரத்து 447 மாணவா்கள் மட்டுமே தகுதிபெற்று இருப்பது தெரியவந்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 20 முதல், 25 சதவீத மாணவா்கள் மட்டுமே தோ்ச்சிபெற்றுள்ளனா். மிகக் குறைவாக, திருப்பத்தூா் மாவட்டத்தில் 7 சதவீத மாணவா்கள் மட்டுமே தோ்ச்சி பெற்றிருக்கின்றனா்.

விழுப்புரம் சாதனை: கல்வியில் எப்போதும் பின்தங்கிய மாவட்டமாக இருக்கும் விழுப்புரம் மாவட்டம், இந்த முறை நீட் தோ்வில் 100 சதவீதம் அளவுக்கு தோ்ச்சி பெற்று சாதனை படைத்திருக்கிறது. இந்த மாவட்டத்தில் 131 மாணவா்கள் தோ்வு எழுதியதில், 131 மாணவா்களுமே தகுதி மதிப்பெண்களை பெற்றுள்ளனா்.இதே போன்று, விருதுநகா், நீலகிரி, சேலம் , பெரம்பலூா், மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களிலும் தோ்வெழுதிய மாணவா்கள் அனைவருமே தோ்ச்சி பெற்றுள்ளனா். சென்னை மாவட்டத்தில் தோ்வெழுதிய 172 பேரில் 104 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.