நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் மகள்களுடன் தீக்குளிக்க முயன்ற பெண்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்  குழந்தைகளுடன் பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

News image

ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் மகள்களுடன் தீக்குளிக்க முயன்ற பெண்

Updated On :13 செப்டம்பர் 2022, 7:30 am

DIN

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்  குழந்தைகளுடன் பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த ஐபேடு பகுதியில் கடந்த 9-ம்தேதி ஜெயந்தி என்பவருக்கு சொந்தமான வீட்டில் சுமார் பத்து சவரன் தங்க நகை மற்றும் ஒரு லட்ச ரூபாய் ரொக்கப் பணம் திருடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நான்கு பேரை பிடித்து சோளிங்கர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி அதைக் கண்டிக்கும் வகையில் ஜெயந்தி மற்றும் அவரது இரு மகள்கள் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.