டெண்டர் முறைகேடு: இபிஎஸ் மீதான நடவடிக்கைக்கு தடையில்லை

டெண்டர் முறைகேடு வழக்கில் இபிஎஸ் மீதான நடவடிக்கைக்கு தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

டெண்டர் முறைகேடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி மீதான நடவடிக்கைக்கு தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டெண்டர் முறைகேடு புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க தடைவிதிக்க வேண்டும். பதில்மனு தாக்கல் செய்யும் வரை லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் என்ற இபிஎஸ் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

ரூ.4,800 கோடி முறைகேடு தொடர்பான ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை ஆணையரிடம் உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் முந்தைய ஆட்சியின் போது, நெடுஞ்சாலைத் துறை மூலம் சாலை மற்றும் சாலை சீரமைப்புப் பணிக்கான டெண்டர் வழங்கியதில் சுமார் ரூ.4,800 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடைபெற்றதாக திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ். பாரதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்நிலையில், டெண்டர் முறைகேடு வழக்கில் இபிஎஸ் மீதான நடவடிக்கைக்கு தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com