தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

டெண்டர் முறைகேடு: இபிஎஸ் மீதான நடவடிக்கைக்கு தடையில்லை

டெண்டர் முறைகேடு வழக்கில் இபிஎஸ் மீதான நடவடிக்கைக்கு தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :14 செப்டம்பர் 2022, 12:05 pm

DIN

டெண்டர் முறைகேடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி மீதான நடவடிக்கைக்கு தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டெண்டர் முறைகேடு புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க தடைவிதிக்க வேண்டும். பதில்மனு தாக்கல் செய்யும் வரை லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் என்ற இபிஎஸ் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

ரூ.4,800 கோடி முறைகேடு தொடர்பான ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை ஆணையரிடம் உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் முந்தைய ஆட்சியின் போது, நெடுஞ்சாலைத் துறை மூலம் சாலை மற்றும் சாலை சீரமைப்புப் பணிக்கான டெண்டர் வழங்கியதில் சுமார் ரூ.4,800 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடைபெற்றதாக திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ். பாரதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்நிலையில், டெண்டர் முறைகேடு வழக்கில் இபிஎஸ் மீதான நடவடிக்கைக்கு தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.