சென்னை: சென்னையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய முக்கிய ரௌடியின் திருமணத்துக்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளித்திருந்தனர்.
குற்றப்பின்னணி கொண்ட ரௌடி நரேஷ் பாபுவின் திருமணம் போலீஸ் பாதுகாப்புடன் நடந்து முடிந்துள்ளது.
நரேஷ் பாபுவின் திருமணம் நடைபெறவிருந்த திருமண மண்டபம் முழுக்க காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாகவது, திருமணத்தில் புகுந்து, அவரது எதிரிகள் நரேஷ் பாபுவைக் கொல்ல திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. 35 வயதாகும் நரேஷ்பாபு பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு சோமங்கலம் காவல்நிலையத்தில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், அவரது திருமணத்தன்று அவரைக் கொல்ல அவரது எதிரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றது.
இந்த நிலையில், திருமண மண்டபத்தைச் சுற்றிலும் ஏராளமான காவல்துறைனிர், காஞ்சிபுரம் காவல்நிலையத்தில் இருந்து வரவழைக்கப்பட்டு குவிக்கப்பட்டுள்ளனர்.
ரெளடி நரேஷ் பாபுவுக்கும் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் நடந்த திருமணத்துக்கு வந்த அனைவரும் காவல்துறை சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டனர்.
மோசமான அசம்பாவிதம் ஏதேனும் நடக்கக் கூடாது என்பதற்காகவே காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!

கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் கொடுக்க பிரிட்டன் மன்னரிடம் கோருவேன்! மம்தானி
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


