கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே தென்பெண்ணை ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட விவசாயி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாயும் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து தென்பெண்ணை ஆற்றின் கரையோரப் பகுதிகள், தாழ்வான பகுதிகளில் வசிப்போருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் யாரும் ஆற்றை கடக்க வேண்டாம் என பொதுப்பணித் துறையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கிருஷ்ணகிரியை அடுத்த திம்மாபுரத்தைச் சேர்ந்த விவசாயி முனியப்பன் (55), காவாபட்டி என்ற கிராமத்தில் உள்ள தனது தென்னந்தோப்பு இருக்கும் ஆற்றைக் கடந்து சென்றார். ஆற்றைக் கடந்து செல்லும்போது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.
தகவலறிந்த கிருஷ்ணகிரி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று முனியப்பனை உயிருடன் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணி நேரத் தேடுதலுக்கு பிறகு முனியப்பனின் உடல் சடலமாக மீட்கப்பட்டு கிராம நிர்வாக அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து காவேரிப்பட்டிணம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் ஆற்று வெள்ளத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் திம்மாபுரம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஆஸ்கர் விருது விழா தொடங்கியது.. ஒன் பேட்டில் ஆப்டர் அனதர், ஃபிராங்கன்ஸ்டைன் படங்களுக்கு விருது!

அரசியில் கட்சிகளின் விளம்பரங்களை அகற்றவேண்டும்: கள்ளக்குறிச்சி ஆட்சியா்

அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வால் சாமானிய மக்கள் பாதிப்பு! - வைகோ

சட்டப்பேரவைத் தோ்தல்: பறக்கும் படை வாகனங்கள் தொடங்கி வைப்பு
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

