ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கிருஷ்ணகிரி அருகே ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட விவசாயி சடலமாக மீட்பு

கிருஷ்ணகிரி அருகே தென்பெண்ணை ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட விவசாயி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

News image
Updated On :15 செப்டம்பர் 2022, 10:26 am

DIN

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே தென்பெண்ணை ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட விவசாயி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாயும் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து தென்பெண்ணை ஆற்றின் கரையோரப் பகுதிகள், தாழ்வான பகுதிகளில் வசிப்போருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் யாரும் ஆற்றை கடக்க வேண்டாம் என பொதுப்பணித் துறையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கிருஷ்ணகிரியை அடுத்த திம்மாபுரத்தைச் சேர்ந்த விவசாயி முனியப்பன் (55), காவாபட்டி என்ற கிராமத்தில் உள்ள தனது தென்னந்தோப்பு இருக்கும் ஆற்றைக் கடந்து சென்றார். ஆற்றைக் கடந்து செல்லும்போது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.

தகவலறிந்த கிருஷ்ணகிரி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று முனியப்பனை உயிருடன் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மணி நேரத் தேடுதலுக்கு பிறகு முனியப்பனின் உடல் சடலமாக மீட்கப்பட்டு கிராம நிர்வாக அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து காவேரிப்பட்டிணம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் ஆற்று வெள்ளத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் திம்மாபுரம்  கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.