மணல் திருட்டை தடுப்பதற்கு பல்வேறு உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்தும் தொடர்ந்து நடைபெறுவது எப்படி என்று உயர் நீதிமன்றக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகம் முழுவதும் சட்டவிரோத மணல் திருட்டு என்பது இருக்கக் கூடாது என்று உயர் நீதிமன்றக் கிளை தெரிவித்துள்ளது.
அமராவதி ஆற்றில் மணல் அள்ளுவதை தடுக்கவும், மணல் எடுக்க ஆற்றில் போடப்பட்ட பாதையை அகற்றவும் கோரி வழக்கு தொடரப்பட்டது. கரூரை சேர்ந்த குணசேகரன் தொடுத்த வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிக்க: நிர்வாணப் படத்தை நான் வெளியிடவில்லை: ரன்வீர் சிங் புதிய விளக்கம்
தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை 2 வாரத்திற்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.