தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

பாஞ்சாங்குளம் பள்ளி விவகாரம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்!

பாஞ்சாங்குளம் பள்ளி விவகாரம் பற்றி முதன்மைக் கல்வி அலுவலரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 

News image

அன்பில் மகேஷ் பொய்யாமொழி (கோப்புப் படம்)

Updated On :20 செப்டம்பர் 2022, 4:42 pm IST

பாஞ்சாங்குளம் பள்ளி விவகாரம் பற்றி முதன்மைக் கல்வி அலுவலரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 

'போதை இல்லா பாதை' எனும் அமைப்பின் மூலம் போதை ஒழிப்புக்காக தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பிரசாரம், வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி சென்னையிலிருந்து தொடங்கப்பட உள்ளது. இது தொடர்பான போஸ்டரை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பிரஸ் கிளப்பில் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.  

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 'போதை பழக்கத்தால் ஏற்படும் பாதிப்பை மாணவர்கள் உணர்வதில்லை. இதுபோன்ற போதைக்கு அடிமையானவர்கள் மருத்துவர்களை நேரில் சென்று அணுக வேண்டும். மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெறுவதை அவமானமாகக் கருதக்கூடாது. சிற்பி என்ற மாணவர் அமைப்பு மூலம் போதை தடுப்பு விழிப்புணர்வு பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது' என்றார். 

பள்ளிகளில் பிரச்சனை இருந்தால் மாணவர்கள் 1447 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் புகார் அளிக்கலாம். பாஞ்சாங்குளம் பள்ளி விவகாரம் பற்றி முதன்மைக் கல்வி அலுவலரிடம் விளக்கம் கேட்டுள்ளோம். அன்றைய தினம் 12 மாணவர்கள் ஏன் பள்ளிக்கு வரவில்லை என்பது குறித்தும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. விசாரணை முடிந்து சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். 

மேலும், பன்றிக் காய்ச்சல் பரவுவதால் தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், 'அதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆலோசித்து முடிவெடுப்பார்கள்' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.