வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

அடுத்த மாதம் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை?

தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் கூடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

News image
Updated On :20 செப்டம்பர் 2022, 7:24 am

DIN

தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் கூடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வருகின்ற அக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்தில், தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக 5 நாள்கள் கூட்டத் தொடர் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில், அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஜெயலலிதா மரண வழக்கை விசாரித்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கை விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையும் தாக்கல் செய்யப்படவுள்ளது.

மேலும், ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசரச் சட்டமும் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் நாள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை பேரவைத் தலைவர் அப்பாவு விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.