ஆயுதபூஜைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு

ஆயுதபூஜை விடுமுறைகால சிறப்பு பேருந்துகள் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் புதன்கிழமை இன்று (அக்.21) அறிவித்துள்ளார். 
ஆயுதபூஜைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு
Published on
Updated on
1 min read

ஆயுதபூஜை விடுமுறைகால சிறப்பு பேருந்துகள் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் புதன்கிழமை இன்று (அக்.21) அறிவித்துள்ளார். 

ஆயுதபூஜையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1 ஆகிய இரு நாள்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று, கோயம்பேடு உள்ளிட்ட 3 பேருந்து நிலையங்களிலிருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றும், சென்னையிலிருந்து நாள்தோறும் இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 2,050 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை தவிர்த்து பிற ஊர்களிலிருந்து மற்ற பகுதிகளுக்கு 1,650 சிறப்பு பேருந்துகளையும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com