தமிழகத்தில் இதுவரை மொத்தம் 1,267 பேருக்கு இன்புளுயன்சா காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாள்களாக வைரஸ் காய்ச்சல் அதிகமாகப் பரவி வருகின்றது. இதில் இன்புளுயன்சா காய்ச்சலானது பெரும்பாலும் குழந்தைகளை அதிகம் பாதிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
எச்1 என்1 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் இதுவரை 1,267 பேருக்கு இன்புளுயன்சா காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்புளுயன்சா காய்ச்சல் அதிகரித்து வருவதால் 15 நாள்களில் 6000 பரிசோதனை கிட் வாங்க சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.
நேற்று வரை தமிழ்நாட்டில் 5,064 பேருக்கு காய்ச்சல் காரணமாக எச்1 என்1 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.