தமிழகத்தில் மேலும் 2 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகத்தில் இன்று புதிதாக 529 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னையில் 111 போ், செங்கல்பட்டில் 57 போ், கோவையில் 34 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதனால் மொத்த பாதிப்பு 35,79,368-ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் இன்று 2 பேர் பலியானார்கள். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 38,044ஆக உள்ளது. இன்று ஒரு நாளில் மட்டும் 463 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதையும் படிக்க- மத்திய பிரதேசம்: பள்ளி கழிவறையை கைகளால் சுத்தம் செய்த பாஜக எம்பி
இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 35,36,027-ஆக உயர்ந்துள்ளது. தற்போது 5,297 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர்.