

ஆன்லைன் சூதாட்ட அவசரத் தடை சட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஆன்லைன் விளையாட்டுகள் ஏற்படுத்தியுள்ள தாக்கம் மற்றும் அனைத்து மக்களின் கருத்துக்களின் அடிப்படையில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்காக அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 29ஆம் தேதி அமைச்சரவையின் பார்வைக்கு வைக்கப்பட்ட வரைவு அவசரச் சட்டம் மேலும் வலுவாக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அவசரச் சட்டத்துக்கு ஆளுநரின் ஒப்புதல் பெற்று விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தமிழக அரசு அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.