குரூப் 2, குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், குரூப் 2 பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வை கடந்த மே 21 ஆம் தேதி நடத்தியது. முதல்நிலைத் தேர்வு முடிவுகள் ஜூன் இறுதியில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் குரூப் 2 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
மேலும், காலியாக உள்ள 7,138 பணியிடங்களுக்கு கடந்த ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.