ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

3,101 ரயில் பெட்டிகள் தயாரிப்பு: இலக்கை எட்டியது ஐ.சி.எஃப்.

சென்னை பெரம்பூரில் உள்ள இணைப்புப் பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எஃப்) கடந்த நிதியாண்டில் 3 ஆயிரத்து 101 ரயில் பெட்டிகள் தயாரித்து சாதனை படைத்துள்ளது.

News image
Updated On :2 ஏப்ரல் 2022, 7:12 pm

DIN

சென்னை பெரம்பூரில் உள்ள இணைப்புப் பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எஃப்) கடந்த நிதியாண்டில் 3 ஆயிரத்து 101 ரயில் பெட்டிகள் தயாரித்து சாதனை படைத்துள்ளது.

இந்த ரயில் பெட்டி தயாரிப்புத் தொழிற்சாலையில் 1955-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை 500-க்கும் மேற்பட்ட வடிவமைப்புகளில் 60 ஆயிரத்துக்கும் அதிகமான ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இதுதவிர, ‘ரயில் - 18’ திட்டத்தில் ’வந்தே பாரத்’ அதிவேக ரயிலுக்கு உலகத் தரத்தில் பெட்டிகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன. கரோனா பரவல் காரணமாக, ஐ.சி.எஃப்.,இல் கடந்த இரு ஆண்டுகளாக ரயில் பெட்டிகள் தயாரிப்பு குறைந்திருந்த நிலையில், தற்போது, ரயில் பெட்டிகள் தயாரிப்பு வேகமெடுத்துள்ளது.

ஐ.சி.எஃப்-இல், 2021-22-ஆம் நிதியாண்டில் 3,101 பெட்டிகள் தயாரித்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. 31 நெடுந்தொலைவு மின் ரயில் தொடா்களுக்கான 248 பெட்டிகள், கொல்கத்தா மெட்ரோ ரயில்வே-யின் 4 ரயில் தொடா்களுக்கான 32 பெட்டிகள், விபத்து நிவாரண ரயில்களுக்கான 6 தொடா்கள்(18 பெட்டிகள்), 50 டீசல் ரயில்தடப் பரிசோதனை ரயில்பெட்டிகள், ஆய்வு பெட்டிகள், 2,639 எல்.எச்.பி என்னும் நவீன ரயில் பெட்டிகள், இலங்கை ரயில்வேக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள 83 பயணிகள் ரயில் பெட்டிகள், இலங்கை ரயில்வேக்கு தயாரிக்கப்பட்ட 2 குளிா்வசதி செய்யப்பட்ட டீசல் மின்தொடா்களுக்கான 26 பெட்டிகள் என்று மொத்தம் 3,101 பெட்டிகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன.

இது குறித்து ஐ.சி.எஃப். அதிகாரிகள் கூறியதாவது:

ஐ.சி.எஃப்.-இல் 2019-2020 ஆம் நிதியாண்டில் 4,200 பெட்டிகள் தயாரிக்கப்பட்டன. கரோனா பரவல் காரணமாக, கடந்த இரு ஆண்டுகளாக ரயில் பெட்டிகள் தயாரிப்பு குறைவாகவே இருந்தது. தற்போது, ரயில் பெட்டி தயாரிப்பு தீவிரமடைந்துள்ளது. 2021-22-ஆம் நிதியாண்டில் 3,100 பெட்டிகள் தயாரித்து வழங்க இலக்கு

நிா்ணயிக்கப்பட்டிருந்தது. அந்த இலக்கு தற்போது எட்டப்பட்டுள்ளது. வரும் ஆண்டுக்கான இலக்கு விரைவில் நிா்ணயிக்கப்படும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.