மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன்: சசிகலா

அதிமுகவில் இருந்து தன்னை நீக்கியது செல்லும் என்ற சென்னை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன் என்று சசிகலா தெரிவித்துள்ளார். 

News image
சசிகலா
Updated On :11 ஏப்ரல் 2022, 8:33 am

DIN

அதிமுகவில் இருந்து தன்னை நீக்கியது செல்லும் என்ற சென்னை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன் என்று சசிகலா தெரிவித்துள்ளார். 

சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கி கடந்த 2017ல் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிராக, சசிகலா சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். தன்னை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லாது என்று அறிவிக்கக் கோரினார். 

இதனிடையே, சசிகலாவின் கோரிக்கையை நிராகரிக்கக் கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். 

இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில், சசிகலாவின் கோரிக்கையை நிராகரித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அதிமுக நீக்கியது செல்லும் என சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 நாமக்கல் ஆஞ்சனேயர் கோயிலில் வழிபாடு செய்தார் சசிகலா 

 நாமக்கல் ஆஞ்சனேயர் கோயிலில் வழிபாடு செய்தார் சசிகலா 

இதனிடையே, நாமக்கல் ஆஞ்சனேயர் கோயிலில் திங்கள் கிழமை நண்பகல் 1 மணியளவில் சசிகலா சுவாமி தரிசனம் மேற்கொண்டார். சுவாமிக்கு அர்ச்சகர் ராஜாபட்டர் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.  சசிகலா மனமுருகி வழிபாடு மேற்கொண்டார். அர்ச்சகர்கள் சசிகலாவுக்கு மாலை அணிவித்து பூஜைகளைச் செய்தனர். தொடர்ந்து கோயில் வளாகத்தை வலம் வந்தார்.

அப்போது, 'அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லும்' என சென்னை உரிமையியல் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பியபோது, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன் என்றார்.

இதனைத் தொடர்ந்து திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு சேலம் மாவட்டத்தில் உள்ள முக்கிய கோயில்களுக்குச் சென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.