முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், நளினி உள்ளிட்ட எழுவர் விடுதலை தொடர்பான கோப்புகள் கடந்த ஆண்டே குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன், நளினி உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்வது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி தமிழக அரசு ஆளுநருக்கு அனுப்பியுள்ளது.
இதையும் படிக்க | இந்தியாவுக்கென தனி அடையாளத்தை உருவாக்கியது சினிமா: அனுராக் தாக்கூர்
இந்த தீர்மானத்தின் மீது தமிழக ஆளுநர் நடவடிக்கை எடுக்க காலதாமதம் செய்து வருவதாகவும், தமிழக சட்டப்பேரவையின் தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அரசியலமைப்பு எதிரானது எனவும் கூறி நளினி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்த நிலையில் எழுவர் விடுதலை தொடர்பான கோப்புகளை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய விவரங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதையும் படிக்க | கரோனா கடுமையாக பாதித்தவர்களில் பெண்களுக்கே அதிக அறிகுறிகள்: ஆய்வு
இதற்கு பதிலளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் எழுவர் விடுதலை தொடர்பான கோப்புகளை கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்ததாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 25ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.