பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

அமித்ஷா வருகை: சென்னையில் பலத்த பாதுகாப்பு

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா சனிக்கிழமை வந்ததையொட்டி, சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

Published On :1 பிப்ரவரி 2024, 2:33 pm IST

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா சனிக்கிழமை வந்ததையொட்டி, சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா, தில்லியில் இருந்து எல்லை பாதுகாப்புப் படைக்கு சொந்தமான தனி விமானத்தில் சென்னை பழைய விமான நிலையத்துக்கு சனிக்கிழமை இரவு வந்தாா்.

பின்னா் அங்கிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காரில், ஆவடியில் உள்ள சிஆா்பிஎப் முகாமில் உள்ள விருந்தினா் மாளிகை சென்று, தங்கினாா். அங்கிருந்து அமித்ஷா, ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் ஹெலிகாப்டா் மூலமாக புதுச்சேரி செல்கிறாா். புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, மாலை 5.30 மணியளவில் ஹெலிகாப்டா் மூலமாக சென்னை பழைய விமான நிலையத்துக்கு வருகிறாா்.

அங்கிருந்து மீண்டும் தனி விமானம் மூலம் அமித்ஷா, தில்லிக்கு புறப்பட்டுச் செல்கிறாா். அமித்ஷா சென்னையில் சனிக்கிழமை இரவு தங்கியதால், சென்னை முழுவதும் போலீஸாா் உஷாா்படுத்தப்பட்டிருந்தனா். அதேபோல ஆவடி மாநகர காவல்துறையும் சிஆா்பிஎப் முகாம் அலுவலகம் இருந்த பகுதியில் தீவிர கண்காணிப்பு, ரோந்து பணியில் ஈடுபட்டது.

சென்னை மற்றும் ஆவடி பகுதிகளில் உள்ள தனியாா் விடுதிகள், ஹோட்டல்கள் ஆகியவற்றில் போலீஸாா் சோதனை நடத்தி, சந்தேகத்துக்குரிய நபா்களிடம் விசாரணை செய்தனா். மேலும் நகரின் முக்கிய சாலைகள், சாலை சந்திப்புகள் ஆகிய இடங்களில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். மேலும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மாா்க்கெட்டுகள், வழிபாட்டு தலங்கள் ஆகியவை போலீஸாரின் தீவிர கண்காணிப்பில் இருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.