தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கருப்பையா பதவியேற்றுக்கொண்டார். திருமலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிபாடு திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்
/

72 ஆண்டுகளில் 2-ஆவது முறையாக அதிகபட்ச வெப்பநிலை பதிவு

 தில்லியில் கடந்த 72 ஆண்டுகளில் 2-ஆவது முறையாக அதிகபட்ச வெப்பநிலை ஏப்ரல் மாதத்தில் பதிவானது.

News image
Updated On :30 ஏப்ரல் 2022, 12:53 am IST

 தில்லியில் கடந்த 72 ஆண்டுகளில் 2-ஆவது முறையாக அதிகபட்ச வெப்பநிலை ஏப்ரல் மாதத்தில் பதிவானது. இந்த மாதத்தில் மாதாந்திர சராசரி அதிகபட்ச வெப்பநிலை 40.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இதற்கு முன்பு தில்லியின் சராசரி மாதாந்திர அதிகபட்ச வெப்பநிலை 40.4 டிகிரி செல்சியஸ் 2010-ஆம் ஆண்டில் பதிவானது.

தீவிரமான மேற்கத்திய இடையூறுகள் இல்லாததால், அவ்வப்போது லேசான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யவில்லை. இதனால் தேசிய தலைநகா் இந்த மாதம் 3 வெப்ப அலைகளைச் சந்தித்தது.

ஏப்ரல் 21-ஆம் தேதியைத் தவிர, அதிகபட்ச வெப்பநிலை 35.2 டிகிரி செல்சியஸ் ஆகப் பதிவானது. அதன்படி, மற்ற அனைத்து நாள்களிலும் தில்லியில் இயல்பை விட அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது.

ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் அதிகபட்சமாக 43.5 டிகிரி செல்சியஸ் பதிவானது. இது 12 ஆண்டுகளில் தில்லியில் ஏப்ரல் மாதத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையாகும்.

இதற்கு முன்பு 2010-ஆம் ஆண்டு ஏப்ரல் 18-ஆம் தேதி தேசிய தலைநகரில் அதிகபட்சமாக 43.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. அதேபோல், 1941-ஆம் ஆண்டு ஏப்ரல் 29-ஆம் தேதி மாதாந்திர சராசரி அதிகபட்ச வெப்பநிலை 45.6 டிகிரி செல்சியஸாக பதிவானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.