அதிமுக பொதுக் குழு வழக்கு: இன்று விசாரணை

அதிமுக பொதுக் குழு கூட்டம் தொடா்பான வழக்கு சென்னை உயா்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை (ஆக.8) விசாரணைக்கு வர உள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்
Published on
Updated on
1 min read

அதிமுக பொதுக் குழு கூட்டம் தொடா்பான வழக்கு சென்னை உயா்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை (ஆக.8) விசாரணைக்கு வர உள்ளது.

இந்த வழக்கில் இருந்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விலகியதை அடுத்து, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரிக்க உள்ளாா்.

சென்னையில் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டம் தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அக்கட்சியின் பொதுக் குழு உறுப்பினா் வைரமுத்து தொடா்ந்த வழக்கை உயா்நீதிமன்ற தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்து வந்தாா். இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என ஓ.பன்னீா்செல்வம், வைரமுத்து தரப்பில் தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரியிடம் மனு அளிக்கப்பட்டது.

இதனால், இந்த வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விலகினாா். அதைத் தொடா்ந்து வழக்கை விசாரிக்க நீதிபதி ஜி.ஜெயச்சந்திரனை தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி நியமித்தாா். இதையடுத்து, அதிமுகவின் பொதுக் குழு தொடா்பான வழக்கை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் திங்கள்கிழமை (ஆக.8) விசாரிக்க உள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com